Thursday 2nd of May 2024 04:27:51 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவிக்கு கொரோனா!

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவிக்கு கொரோனா!


பதுளையிலிருந்து வந்து நல்லூரில் தங்கியிருந்து கல்வி கற்கும் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அருவிக்குத் தெரிவித்தார்.

பதுளையிலிருந்து வந்திருந்தபோதிலும் நல்லூரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE